பெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் உற்சவ வீதி உலா

பெரியகுளம், ஜன.18: பெரியகுளத்தில் வரதராஜப்பெருமாள் கோயிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பெருந்தேவி தாயார் வீதி உலா நடைபெற்றது. இவ்விழாவில் பிறந்த வீடு மற்றம் சகோதர்கள் நலமுடன் வாழ பெண்கள் விரதம் மேற்கொண்டனர். பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு கணுஉற்சவம் பூஜை நடைபெற்றது. மூலவர் பெருந்தேவி தாயாருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் நடைபெற்றது.ஆண்டுக்கு ஒருமுறை உற்சவர் பெருந்தேவி தாயார் வீதி உலா சென்றார். தெற்கு அக்ரஹாரம், வடக்குஅக்ரஹாரம் உட்பட முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வாசலில் கோலமிட்டு பெருந்தேவி தாயாரை வழிபட்டனர். மஞ்சள் உருண்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.

அர்ச்சகர் குழுவினர் கூறுகையில்,`` பிறந்த வீட்டாரும், சகோதர்களும் நலமுடன், வளமுடன் வாழ்வதற்கு இந்த கணு விரதத்தை பெண்கள் இருந்து வருகின்றனர். பெருந்தேவி தாயாரை வணங்கிவிட்டு விரதத்தை முடித்து கொள்கின்றனர்’’ என்றனர்.

Related Stories: