சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளி கைது

திருப்பூர், டிச.7: குன்னத்தூரில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மினியான் (55). கூலித் தொழிலாளி. இந்நிலையில், அவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சத்தம் போட்டு அழுததால், மினியான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் மினியானை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: