சாதியை சொல்லி திட்டியவருக்கு சிறை

சிவகங்கை, டிச.6: திதிருப்புவனம் அருகே பச்சேரி காலனியை சேர்ந்தவர் விவசாயி அய்யனார். மழவராயனேந்தலை சேர்ந்தவர் விவசாயி மணி(60). கடந்த 20.07.2006 அன்று பச்சேரியில் வயலில் வரப்பு தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.  இதில் அய்யனாரை மண்வெட்டியால் தாக்கி, சாதியை சொல்லி திட்டியதாக மணி மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் மணிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தனியரசு நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: