ஜெ.வுக்கு அஞ்சலி செலுத்துவதில்அதிமுக-அமமுகவினர் இடையே ேமாதல் 4 பேர் படுகாயம்

ஆண்டிபட்டி, டிச.6: ஆண்டிபட்டி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் பீமராஜ் (63), அமமுக பிரமுகர். அதே ஊரை சேர்ந்தவர் முத்துமணி (46). அதிமுக பிரமுகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முன்னேற்பாடு பணிகளில் அதிமுகவினரும், அமமுகவினரும் ஈடுபட்டிருந்தனர்.

இதையொட்டி கிராம சாவடியில் ஜெயலலிதா படத்தை வைப்பதில் பீமராஜ் தரப்புக்கும், முத்துமணி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. 2 தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர்.இதில் அமமுகவைச் சேர்ந்த பீமராஜ் மற்றும் அவரது மகன் முத்துக்குமாருக்கும், அதிமுகவைச் சேர்ந்த முத்துமணி, அவரது சகோதரி ஜோதிமணி ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க ராமலிங்கபுரத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கண்டமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: