முன்விரோத தகராறில் தாக்குதல் 6 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, டிச. 6:  உளுந்தூர்பேட்டை அருகே வடபெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் கண்ணன்(60). இவருக்கும், இதே கிராமத்தில் வசித்து வந்த சடகோபன் மகன் ராஜ்குமார்(32) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் அசிங்கமாக திட்டி தாக்கிக்கொண்டனர். இந்த பிரச்னை தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமார், கீதா, இந்திராணி ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அதில் ராஜ்குமாரை கைது செய்தனர். இதே பிரச்னை தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் ராஜேந்திரன்(54), மணிவேல், மூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அதில் ராஜேந்திரனை கைது செய்தனர்.

Related Stories: