நாகை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

நாகை. நவ.15: நாகை கலெக்டர் அலுவலத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து அரசு துறை அலுவலருடனான ஆய்வு கூட்டம் நடந்தது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள கஜா புயலையடுத்து நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கு கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலரான மாநில கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி. விஜயகுமார், டிஆர்ஓ விஜயகுமார், மாவட்ட வன அலுவலர் நாகசதீஸ்கெஜிலாலி, மாவட்ட திட்ட அலுவலர் சங்கர் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: