காரைக்கால், நவ.14: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நாளை(15ம் தேதி) நடத்த இருந்த மறியல் போராட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என, அரசு ஊழியர் சம்மேளன பொது செயலர் ஷேக் அலாவுதீன் அறிவித்துள்ளார்.இது குறித்து, காரைக்கால் மாவட்ட அரசு ஊழியர் சம்மேளன பொது செயலர் ஷேக் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பஜன்கோவா, புதுச்சேரி சாலை போக்குவாத்துக்கழகம், மின்திறல் குழுமம், அங்கன்வாடி, பாப்ஸ்கோ, பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தவேண்டும். உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு மாதம் மாதம் ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே அரசின் கவனத்தை எங்கள் மீது திருப்ப, நவம்பர் 15ம் தேதி, காரைக்காலில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்.