ரெட் அலார்ட் வாபஸ் பேரிடர் மீட்பு குழு தயார்

திருப்பூர், அக்.7: புயல்  காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  சார்பில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி, பேரிடர் மீட்புக்  குழுக்கள் திருப்பூர் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது.

திருப்பூர்  மாவட்ட எஸ்பி கயல்விழி நேரில் சென்று பேரிடர் குழு மற்றும் அவர்கள்  பயன்படுத்த வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டு அவசர காலத்தில் எடுக்க  வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார்.

அவர்  கூறுகையில்,`பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழு தயாராக உள்ளது. இந்த குழு  நல்லூரை அடுத்த நல்லிகவுண்டம்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தை  தலைமையிடமாக கொண்டு செயல்படும். அரசு வெளியிட்டுள்ள இலவச எண்ணிற்கு  பொதுமக்கள் அழைத்தால் இந்த பேரிடர் மீட்பு குழு செல்வார்கள். மேலும்,  மீட்புபணியின் போது பயன்படுத்தப்படும் லைட்கள் மற்றும் அனைத்து வகையான  பாதுகாப்பு பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன்  போலீசார் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறோம். தற்போது ரெட் அலார்ட் வாபஸ் பெற்ற நிலையிலும் மீட்புக் குழு  தயாராக உள்ளது’ என்றார்.

Related Stories: