காரைக்காலில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காரைக்கால்,செப்.18: காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற பெரியாரின் பிறந்தநாள் விழாவில், எம்.எல்.ஏ, கலெக்டர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் சிலைக்கு, அரசு சார்பில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா, கலெக்டர் (பொ) விக்ராந்த்ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில், அரசுத்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் நாஜிம் மற்றும் திமுகவினர், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஓமலிங்கம், வி.கே.கணபதி மற்றும் அதிமுகவினர், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அம்பலவாணன் மற்றும் மதிமுகவினர், விடுதலைச்சிறுத்தை சார்பில், செந்தமிழ்செல்வன், திக சார்பில், மண்டல தலைவர் நாராயணசாமி, மற்றும் திகவினர், காங்கிரஸ் கட்சி சார்பில் மவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் காங்கிரசார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் தனித்தனியே  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Related Stories: