மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

உத்தமபாளையம், செப்.11: க.புதுப்பட்டி பேரூராட்சியில் இயற்கை மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. க.புதுப்பட்டியில் தேசியமண்வள அட்டை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மண்வள விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கம்பம் வட்டார வேளாண்மை துணைஅலுவலர் புகழேந்தி தொடங்கிவைத்தார். குள்ளப்புரம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மண்ணின் வளத்தை பெருக்குதல், இயற்கை உரம் அளித்தல், மண்ணின் சத்துக்களுக்கு ஏற்ப உரமிடுதல், இயற்கையான மண் வளத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி பேரூராட்சி முழுவதும் பேரணி சென்றனர்.பேரணியில் உதவிவேளாண்மை அதிகாரி மணிகண்டன், கணேசன், வளர்மதி, புவனேஷ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: