மும்பை: மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை எட்டிய புதிய உச்சத்தை பதிவு செய்திருக்கிறது. இந்திய பங்கு சந்தைகளில் தொடர்ச்சியாக 8வது நாளாக பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே தொடங்கின. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்கத்தில் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகள் அதிகரித்து 18,604 புள்ளிகளாக காணப்பட்டது. பின்னர் வர்த்தகம் தொடங்கி 1 மணி நேரத்தில் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சற்று குறைய தொடங்கின.