சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் விலையை அதிகரித்துள்ளனர். இந்த 3 நாளில் பெட்ரோல் 69 காசும், டீசல் 84 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விலையேற்றமானது, மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது.