தாகா: குவாட் அமைப்பில் இணைவது குறித்து வங்கதேசம் முடிவு செய்தால் சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017ம் ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது. இந்த நாடுகளின் பொதுவான எதிரியாக சீனா உள்ளது. எனவே குவாட் அமைப்பு மாநாட்டில், சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் 4 நாடுகளின் தலைவர்களும், சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த அமைப்பில் வங்கதேசமும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வங்க தேச தலைநகர் தாகாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வங்கதேசத்துக்கான சீனா தூதர் லீ ஜிமிங் கூறுகையில், ‘‘4 நாடுகளில் குவாட் அமைப்பில் வங்கதேசம் இணைந்தால் சீனாவுடனான வங்கதேசத்தின் உறவில் கடும் பாதிப்பு ஏற்படும்.