சிதம்பரம் அருகே பரிதாபம் : கொள்ளிடம் ஆற்றில் தொழிலாளியை இழுத்து சென்ற முதலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற தொழிலாளியை முதலை இழுத்து சென்றதில் அவர் உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி என்கிற அறிவானந்தம் (56). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பழையநல்லூர் கிராமத்தின் அருகே ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது இவரை ஆற்றில் இருந்த முதலை ஒன்று கடித்து இழுத்து சென்றது.  இதுபற்றி கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார், சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சென்று தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பேராம்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவரின் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறிய படகில் சென்று முனுசாமி உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: