திட்டக்குடி: திட்டக்குடியில் உரம் வாங்குவதற்காக உரக்கடைக்கு குவிந்த விவசாயிகள் போதிய அளவில் உரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அரசு இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் கடந்த ஆடிப்பட்டத்தில் போது விவசாயிகள் தங்களது நிலத்தில் மானாவாரி பயிரான சோளம், பருத்தி, வரகு, நெல் உள்ளிட்ட பயிறு வகைகளை பயிர் செய்துள்ளனர். பயிர் செய்த நாட்களிலிருந்து இடையில் போதிய மழை இன்றி விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில் திடீரென நேற்று இரவு பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திட்டக்குடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பயிருக்கு வகைகளுக்கு உரம் வாங்குவதற்காக உர கடையில் குவிந்தனர். ஆனால் சில உரக்கடைகளில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.