சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், விழுப்புரத்தை சேர்ந்த சிவராஜ், விக்னேஷ் ஆகியோர் தலா 7.50 லட்சம் என 15 லட்சம் பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சியடைந்ததாகவும், இவர்கள் சர்ச்சையில் சிக்கிய ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியதும், சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கடந்த ஜனவரி 28ம் தேதி கைது செய்தனர். இதேபோல், காஞ்சிபுரத்தை சேர்ந்த வடிவு (42), 2018ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்று செம்பியம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.