சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் டியூசன் செண்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சர்த்தானா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 4 மாடிகள் கொண்ட ஒரு வணிக வளாகத்தின் மேல் மாடியில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. படி அருகே பரவிய தீ வேகமாக பரவியதால் பல மாணவர்கள் 4-வது மாடியில் இருந்து ஜன்னல்கள் வழியாக கீழே குதித்தனர். இதில் பலரை கீழே இருந்தவர்கள் காப்பாற்றினர்.