‘தேர்தல் மன்னன்’ பத்மராஜனை அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. 1988ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். குறிப்பாக, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். கடைசியாக 199வது முறையாக திருவாரூர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். அத்தனை தொகுதியிலும் தோல்வி தான். இவரைப் போலவே ஒடிசாவிலும் ஒரு ஹோமியோபதி டாக்டர் தேர்தல் மன்னனாக உள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? 84 வயதாகும் ஷியாம்பாபு என்ற அந்த மருத்துவர், கடந்த 1957 முதல் இன்றுவரை தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். 28 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், முன்னாள் முதல்வர்கள் பிஜு பட்நாயக், ஜே.பி.பட்நாயக், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராம் சந்திரநாத், சந்திரசேகர் சாகு ஆகியோரை எதிர்த்து ஷியாம்பாபு போட்டியிட்டுள்ளார்.