தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட 9 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி மாடம்பாக்கம், சப்தகிரி விநாயகர் கோயில் தெரு, வர்ஷா  அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த மூக்கையா (38), சௌகார் பேட்டை, ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த தன்ராஜ் (30), கொடுங்கையூர், கடும்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கடல் பாண்டி (எ) பாண்டி (25),  புளியந்தோப்பு,  சாஸ்திரி நகரை சேர்ந்த சண்முகம் (எ) சங்கரலிங்கம் (29), கன்னிகாபுரம், வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23), கன்னிகாபுரம், தாஸ் நகர் முதல் தெருவை சேர்ந்த கலையரசன் (எ) அப்பு (33), மாதவரம், பாண்டியன்  தெருவை சேர்ந்த பாபு (34), மாதவரம், உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த அப்பு (எ) நாகராஜ் (31), மாதவரம், கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த செந்தமிழன் (30) ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு  வந்ததால் 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: