இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும் இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட பள்ளிக் குழந்தைகள் சுட்டிக்காட்டினர்.