இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என உலகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும்  இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட பள்ளிக் குழந்தைகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெள்ளி அன்று  ஏராளமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடினார்கள். அமெரிக்க நகரங்களில் நடந்த போராட்டத்தின் போது பேரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டாம் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: