சென்னை : திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் பிறந்த நாள் அன்று நிவாரணப்பணி மேற்கொள்வீர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிசம்பர் 19ம் தேதி க. அன்பழகன் பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்கள் நிவாரணப்பணி செய்ய வேண்டும் என்றும் கஜா புயல் பாதித்த இடங்களில் நலத்திட்ட உதவி செய்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.