ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவேரி வீதியில் குமாரபாளையம் செல்லும் பாலத்தின் அடிவார பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. பவானி நகர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில் இந்த ஓட்டலில் சரக்கு விற்பனை களை கட்டி வருகிறது. 24 மணி நேரமும் சரக்கு விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு ஒரு குவாட்டர் வாங்கினால், ஒரு பிளேட் குடல்கறியும், 4 இட்லியும் இலவசம். இதன் மதிப்பு 140 ரூபாய். இதனால் இந்த ஓட்டலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு சட்ட விரோதமாக மது விற்பது குறித்து போலீசாருக்கு தெரிந்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.