டீசல் விலை ரூ.2.50 குறைப்பதற்கு முன் இருந்த விலையை எட்டியது

சென்னை : டீசல் விலை ரூ.2.50 குறைப்பதற்கு முன் இருந்த விலையை தற்போது எட்டியுள்ளது. மத்திய அரசு உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒன்றரை ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயும் குறைத்தன. டீசல் விலை குறைக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 10வது நாளாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மதிப்புக் கூட்டுவரியைக் குறைக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் டீசல் விலை மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. தமிழ்கத்தில் இன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.80 காசுகளுக்கு விற்பனை ஆகி வருகிறது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: