புழல் சிறை தலைமை வார்டன்கள் உட்பட சிறை அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம்

சென்னை: புழல் மத்திய சிறை தலைமை வார்டன்கள் உட்பட சிறை அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கும் படங்கள் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதைதொடர்ந்து கடந்த 12-ம் தேதி புழல் சிறையில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, டிஐஜி கனகராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது கைதிகளின் அறையில் 18 டிவிக்கள், செல்போன்கள், எப்எம் ரேடியோக்கள் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து புழல் சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த முகமது ரபீக் கோவை சிறைக்கும், முகம்மது இப்ராஹீம் சேலம் சிறைக்கும், முகம்மது ரியாஸ் பாளையங்கோட்டை சிறைக்கும், முகம்மது ஜாகீர் வேலூர் சிறைக்கும், ரபீக் திருச்சி சிறைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் சொகுசு வசதி தரப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை வார்டன்கள் விஜயராஜ் மற்றும் கணேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதகை கிளை தலைமை வார்டனாக விஜயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கம் கிளை சிறை தலைமை வார்டனாக கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறை வார்டன்கள் பாவாடைராயர், ஜெபஸ்டின் செல்வகுமார், சிங்காரவேலன், சுப்ரமணி, பிரதாப் சிங், செல்வகுமார் உள்ளிட்டோரும் வேலூர், கோவை, சேலம், திருச்சி சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை தலைவர் அசுதோஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: