மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளின் பட்டியலில் மாளவிகா மோகனனும் இடம் பிடித்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் தற்போது தெலுங்கு பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். சமீபத்தில் இமயமலைக்கு சென்றவர், அங்கு விதவித போஸ்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதுபற்றி மாளவிகா மோகனன் கூறும்போது,’இமயமலையில் நம்மை சுற்றி நிலவும் நிசப்தம் நம்முடையது அல்ல அது இமயத்தின் நிசப்தம்’ என குறிப்பிட்டிருப்பதுடன், என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் ஓணம் கொண்டாட்டத்துக்காக அணியும் பாரம்பரிய சேலையின் மீதிருக்கும் மோகம் எனக்கு என்றைக்கும் மாறாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சேலை அணிந்து அவர் அளித்திருக்கும் கவர்ச்சி போஸ் ரசிகர்களை கிரங்கடித்திருக்கிறது. சேலையிலும் சிக்கென தெரியும் ஷேப்புடன் இப்படியொரு போஸ் அளிக்கலாம் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளிக் குவிக்கின்றனர்.