பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை மூலவர் சீனிவாச பெருமாளுக்கும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.