போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் கோடையை வரவேற்று வசந்தகால மலர்கள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
போச்சம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் வரை கடும் பனிப்பொழிவு நிலவியது. அதிகாலை முதல் காலை 10 மணி வரையிலும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்தனர். தற்போது, கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயில் கொடுமையை தாங்க முடியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கோடையை வரவேற்று முருக்கம் மரங்கள் பூத்து குலுங்குகிறது. காடு மற்றும் மலைப்பாங்கான இடங்களில் வளரக்கூடிய இந்த மரங்களில் பூக்கள் அடர்ந்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. தீயை கொளுத்தி போட்டால் காணப்படும் இந்த மலர்கள் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.