வேகத்தடையில் வர்ணம் பூசும் பணி

அரூர், செப்.24: அரூர் ஒன்றியம், ஜம்மணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூசப்பட்டு இருந்த வெள்ளை நிற கோடுகள் நாளடைவில் மறைந்து போனது. இதையடுத்து புதியதாக அந்த வழியாக வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் வந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர். அடிக்கடி ஏற்பட்ட விபத்தை அடுத்து வேகத்தடைகளில் வெள்ளை நிற கோடுகள் வரையும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

The post வேகத்தடையில் வர்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.

Related Stories: