வீட்டு பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

 

போச்சம்பள்ளி, மே 5: மத்தூர் அருகே, மாதம்பதி பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி(50). இவர் கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்தார். மறுநாள் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில், வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மாயமாகியிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மாதுமணி(55) என்பவர், வள்ளியின் வீட்டு பூட்டை உடைத்து நகை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மாதுமணியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post வீட்டு பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: