விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆவூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

விராலிமலை, ஆக. 9: விராலிமலை அடுத்துள்ள ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆவூர் பகுதி நேர நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் தலைமை வகித்து நூலக வாசகர் வட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, வெற்றி பதக்கங்களை அணிவித்து வாழ்த்தி பேசினார்.

மாணவர்கள் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் நூலகத்திற்கு மாணவ, மாணவிகள் தொடர்ந்து சென்று தங்கள் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சலீம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூலகர் நாகலட்சுமி, நூலக நண்பர் சகாயமேரி, வாசகர் வட்ட உறுப்பினர்கள் சந்தியா சலோமி, நான்சி ரேச்சல் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆவூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: