விமானத்தில் கடத்தி வந்த 5 அரிய விலங்குகள் பறிமுதல்: சென்னை பயணி கைது

மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலமாக நேற்று சென்னை விமானநிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 5 அரிய வகை விலங்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சென்னை பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். அந்த விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணிமீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அப்பயணி கொண்டு பையில் அசைவு தெரிந்தது. அப்பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 5 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் உயிருடன் கடத்தி வரப்பட்டு இருப்பதை கண்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அப்பயணியிடம் விசாரித்தபோது, இது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அரிய வகை விலங்குகள். இதை அவர் வளர்ப்பதற்காக எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. எனினும், அதற்கான உரிய ஆவணங்கள் அப்பயணியிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அப்பயணியை வெளியே விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பெசன்ட்நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த அரிய வகை விலங்குகளை சோதித்தனர். பின்னர் அந்த 5 விலங்குகளையும் அதே தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதற்கான செலவு தொகையை கடத்தி வந்த சென்னை பயணியிடம் வசூலிக்கவும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post விமானத்தில் கடத்தி வந்த 5 அரிய விலங்குகள் பறிமுதல்: சென்னை பயணி கைது appeared first on Dinakaran.

Related Stories: