விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம்

கும்பகோணம், செப்.15: தமிழ்நாடு கார் வியாபாரிகள் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பு தஞ்சாவூர் மாவட்ட கிளை சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கான விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம் சேகுளம் அருகில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சங்க தலைவர் ஆண்ட்ரூ ரொசாரியோ தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் அஞ்சல் காப்பீட்டு துறை அலுவலர் ஜீவா சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு படிவங்களை வழங்கி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதில் திரளான அங்கத்தினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் சங்க பொருளாளர் முகமது ஃபயாஸ் நன்றி கூறினார்.

The post விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: