வாங்கிபாத்

தேவையான பொருட்கள் :அரிசி – 1 கப்கத்திரிக்காய் – 150 கிராம்எண்ணெய் – தேவையான அளவுவெங்காயம் – 2கடுகு – 1/2 டீஸ்பூன்கடலை பருப்பு – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2முந்திரி பருப்பு – 15கறிவேப்பிலை – 1 இணுக்குபெருங்காயப்பொடி – 2 பின்ச்மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் (விரும்பினால்)புளித்தண்ணீர் – கால் கப்உப்பு – தேவைக்கு.வாங்கி பாத் பொடி :தனியா – 3 ஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,கடலை பருப்பு – 1 ஸ்பூன்,மிளகாய் வற்றல் – 2 ,பட்டை –  சிறு துண்டு,கிராம்பு – 1கொப்பரை தேங்காய் துருவியது – 2 டேபிள்ஸ்பூன்செய்முறை :அரிசியை உதிரியாக வடித்து ஆற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாங்கி பாத் பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். கத்திரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைபருப்பு, பெருங்காயப்பொடி போட்டு தாளித்த பின் முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும். கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். இப்போது வாங்கி பாத் பொடி 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். எல்லாம் நன்கு சேர்ந்த பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சுவையான வாங்கி பாத் ரெடி….

The post வாங்கிபாத் appeared first on Dinakaran.

Related Stories: