வாகனங்கள், தளவாட பொருள் குறித்து மேயர் ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 60-வது வார்டு பரமனுத்து கோவில் அருகில், ஒப்பந்ததாரர்களின் மூலமாக தூய்மை பணிகள் மேற்கொள்ள வாகனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் புதியதாக கொள்முதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் மற்றும் தளவாட பொருட்களை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், தளவாட பொருட்களின் தரம் குறித்தும் சோதனை செய்தார். அப்போது மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை ஆணையர் சுல்தானா, மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், கோவிந்தசாமி, மாநகர் நல அலுவலர் கௌரி சரவணன், சுகாதாரக்குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், கவுன்சிலர் கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வாகனங்கள், தளவாட பொருள் குறித்து மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: