வலங்கைமானில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வலங்கைமான், ஏப். 16: வலங்கைமானில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்த நாள் விழா வலங்கைமான் கடைவீதியில் நடந்தது .அம்பேத்கர் உருவ படத்திற்கு திமுக நகர செயலாளர் சிவநேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி மாநில நிர்வாகி மணி, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து, மதிமுக ஒன்றிய செயலாளர் ஜான் பிரதாப் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விஜய், சமத்துவ கழகம், திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா சிறப்புரை நிகழ்த்தினார். வலங்கைமான் பேரூராட்சி துணைத் தலைவர் தனித்தமிழ்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராஜா, தலைவர் கலியபெருமாள் உள்பட பலர் கொண்டனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணைத் தலைவர் சின்னத்துரை, ஒன்றிய பொருளாளர் மருதையன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், துணை செயலாளர் லெனின் ராஜ், ஒன்றிய துணைத் தலைவர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வலங்கைமானில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: