ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா

தர்மபுரி, ஆக.20: தர்மபுரி விருபாட்சிபுரம், உடுப்பி புத்திகே மட கிளையில், ராகவேந்திர சுவாமியின் 353வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து கோ பூஜையும், பவுர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண சுவாமி பூஜையும் நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை மைசூர் ராமச்சந்திர ஆச்சார் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, சீனிவாசன், கிருஷ்ணன், நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

The post ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா appeared first on Dinakaran.

Related Stories: