முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஆக. 22: சமூக நலத்துறையின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வைப்புத் தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய நிலையில் உள்ள பயனாளிகள், முதிர்வுத் தொகை பெறுவதற்கு தங்களைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் கீழ்காணும் ஆவணங்களை அளித்து இத்திட்டத்தின் பணப் பயன்களை பெறலாம்.

முதிர்வுத்தொகைபெறுவதற்கு அளிக்க வேண்டிய ஆவணங்கள்: சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல், 10ம் வகுப்பு படித்ததற்கான மதிப்பெண் பட்டியல், தாய், மகள் கையொப்பத்துடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஒரு ரூபாய்க்கான அஞ்சல் வில்லை, வங்கிகணக்கு எண் விவரம் முதல்பக்க நகல். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 2 வது தளம், திருவள்ளூர் என்ற முகவரியிலும், அல்லது 044 – 29896049 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: