மாவட்ட பளுதூக்கும் ேபாட்டி செப்.3ல் நடக்கிறது

நாகர்கோவில், ஆக.29: நாகர்கோவில் கோணத்தில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி செப்டம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்ட பவர் லிப்டிங் அசோஸியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட அளவிலான பவர் லிப்டிங் போட்டி, நாகர்கோவில் கோணத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற செப்டம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இதில், சப் ஜூனியர், சீனியர், மாஸ்டர் 1, மாஸ்டர் 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். எடைப்பிரிவுகள் ஆண்கள், 53, 59, 66, 74, 83, 93 கிலோ மற்றும் அதற்கு மேல், பெண்கள் பிரிவில், 43, 47, 52, 57, 63, 69 கிலோ மற்றும் அதற்கு மேல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட பளுதூக்கும் ேபாட்டி செப்.3ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: