மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 8: அஞ்செட்டி அருகே உள்ள சீங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 17வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாயார், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார்(25) என்பவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: