மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சேலம், அக்.5: சேலம் குகை ஆண்டிப்பட்டி ஏரி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(28). வெல்டிங் தொழிலாளியான இவர், கோட்டை அண்ணாநகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 3வது மாடியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், ஆனந்தராஜ் தனது வீட்டின் கீழ் பகுதியில் இருந்து, மாடிக்கு 15 அடி நீள கம்பியை கொண்டு சென்றார். அப்போது, படிக்கட்டில் ஏறியபோது எதிர்பாராத விதமாக, அவ்வழியாக செல்லும் மின்ஒயர் மீது கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்தராஜை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: