×

காவிரி தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள் : கமல்ஹாசன் கிண்டல்

சென்னை:  டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: கர்நாடகத்திலிருந்து காவிரி தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லையா, இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா. சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது என குறிப்பட்டிருந்தார்.

சிறிது நேரத்தில் மற்றொரு டிவிட் வெளியிட்ட கமல், ‘உண்மையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகேஷ் என் குருநாதர்களில் ஒருவர், என் நண்பர்கள் ராஜ்குமார் அண்ணா, சரோஜாதேவி, ரஜினிகாந்த் மற்றும் அம்பரீஷ் போன்றவர்கள் என் சொந்தங்கள். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்த என் நகைச்சுவை அது. துணைவேந்தர் மீதான சாடல் கிடையாது. எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என கூறியுள்ளார்.

Tags :
× RELATED அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிப்பு