மன்னார்குடி அருகே பைக் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி

 

மன்னார்குடி: மன்னார்குடி அருகே பைக் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார். திருவாருர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அசேஷம், சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் கபிலன் (19). தந்தை சரவணன் இறந்து விட்டார். தாய் திலகவதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நாமக்கல்லில் ஒரு தனியார் பாலி டெக்னிக்கில் 2ம் வருடம் கல்வி பயின்று வந்த கபிலன் கல்லூரி விடுமுறை காரணமாக அசே ஷத்தில் உள்ள பாட்டி செல்வமணி வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்த கலைவாணன் என்பவர் தனது நண்பரான கபிலன் வீட்டுக்கு நேற்று காலை பைக்கில் வந்தார். நண்பனின் பைக்கை கபிலன் எடுத்து கொண்டு பால் வாங்க அசேஷம் மெயின் ரோட்டில் வந்தார். அப்போது, உள்ளிக் கோட்டையை சேர்ந்த விவசாயி ஜெயராமன் (75) என்பவர் ஓட்டி சென்ற மொபெட் மீது பைக் உரசி நிலை தடுமாறி சாலையோரத் தில் இருந்த குடிநீர் கட்டை மீது மோதியதில் கபிலன் படுகாய மடைந்தார். ஜெயராமனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்து டவுன் எஸ்ஐ முருகன், எஸ்எஸ்ஐ ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு மன் னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில், கபிலன் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மன்னார்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

The post மன்னார்குடி அருகே பைக் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: