மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் விவசாயி தற்கொலை

தர்மபுரி, ஜூலை 6:தர்மபுரி அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள கருக்கனள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னப்பன் (28), விவசாயி. இவரது மனைவி மோனிஷா (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபித்து கொண்டு, மோனிஷா பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சென்னப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: