மதிமுகவின் மாவட்ட அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு

உடுமலை,மே14: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 5வது திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. உடுமலை தளி ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநில தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் கோவை சேதுபதி தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அவைத்தலைவராக சின்னச்சாமியும்,செயலாளராக தமிழரசும், பொருளாளராக அபிராமி மெடிக்கல் ஜெயக்குமாரும்,துணைச் செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், ரத்தினசாமி, ராதாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினராக லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர்களாக மணிவண்ணன், மோகன், ராம்சாமி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் உடுமலை நகரச் செயலாளர் ராமதாஸ், ரத்னா ஆப்டிகல் ஆறுமுகம் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மதிமுகவின் மாவட்ட அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: