மண் புழு உரம் தயாரிப்பு விழிப்புணர்வு

கீழக்கரை, ஜூலை 10: திருப்புல்லாணி வட்டாரம் பத்ராதரவை கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில், தென்னை நார் கழிவு உரம், மண் புழு உரம் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தென்னை நார் கழிவு தயாரிப்பு, பயன் தென்னை நார் கழிவு உரக்குவியல் அமைக்கும் முறை குறித்து வேளாண் உதவி இயக்குநர் செல்வம் பேசினார்.

தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் முருகானந்தம் பேசுகையில், தென்னையை தாக்கும் காண்டா மிருக வண்டுகளை கட்டுபடுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்தார். மண்புழு உரம் தயாரிப்பு, மட்கும் கழிவுகள் சேகரிப்பு, மண்புழு உர படுக்கை தயாரிப்பு குறித்து வேளாண் துணை அலுவலர் சையது முஸ்தபா விளக்கம் அளித்தார்.

The post மண் புழு உரம் தயாரிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: