போர்வை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம், ஆக. 9: திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பாலசுப்பிரமணி (25). விழுப்புரம் பகுதியில் கடந்த 6 மாதமாக சாலாமேடு என்ற இடத்தில் வாடகை வீடு எடுத்து போர்வை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 நாட்களாக வியாபாரம் சரி இல்லை என்று சக்திவேலிடம் கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். அதன் பிறகு சக்திவேல் தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்கவில்லை.

பின்னர் அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது பாலசுப்பிரமணியன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போர்வை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: