பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

 

பொள்ளாச்சி, அக். 8: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால், பல்வேறு கிராமங்களில் காய்கறி பயிரிடுவதை மேற்கொள்வதை விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழையின்றி வெயிலின் தாக்கமே இருந்தது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது இரவு நேரங்களில் சாரலுடன் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் வடகிழக்கு பருவமழை துவக்கத்தின் அச்சாரமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை appeared first on Dinakaran.

Related Stories: