பேராவூரணி அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு

 

பேராவூரணி, ஆக. 13: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டார அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது. பேராவூரணி வட்டாரத்தில் முதல் கட்டமாக 35 தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற மறுகட்டமைப்பு தேர்தலில் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு புதிய தலைவர், துனைதலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர்.

இதேபோல், சேதுவாசத்திரம் வட்டாரத்தில் தொடக்கப் பள்ளிகளில் முதல் கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டார கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சிவசாமி மேற்பார்வையாளர்கள் முருகேசன் ஆசிரியர் பயிற்றுநர் சரவணன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: