பெர்லினில் வருடாந்திர ஒளி திருவிழா கோலாகலம்..!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருடாந்திர ஒளி திருவிழா தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் 10 நாள்கள் நடக்கும் ஒளி திருவிழா தொடங்கியுள்ளது. அங்குள்ள பிரண்டன்பெர்க் கட்டிடம் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது. அதில் ஒளிபரப்பான ஒளிப்பட செய்தியில் ஐரோப்பாவை ஆட்டுவிக்கும் உக்ரைன் போர் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. பூமியின் எதிர்காலம் மற்றும் இயற்கை குறித்து விளக்கும் ஒளிப்படங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்று இருந்தன. ஜெர்மனி முழுவதும் இருந்து வந்து குவிந்திருந்த பல ஆயிரம் மக்கள் இந்த ஒளி திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர்.

The post பெர்லினில் வருடாந்திர ஒளி திருவிழா கோலாகலம்..! appeared first on Dinakaran.

Related Stories: