பெருநகர் கிராமத்தில் இந்தியன் வங்கியில் தீவிபத்து

 

உத்திரமேரூர், செப்.30: உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வங்கியில் உள்ள ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீ எரிய துவங்கியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், உத்திரமேரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பெருநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் மின்சாதன பொருட்கள் மட்டும் எரிந்து நாசமானது. மேலும், வங்கி கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது. பெருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெருநகர் கிராமத்தில் இந்தியன் வங்கியில் தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: